களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் போராட்டம்.
இந்நிலையில் போராளிகள் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்ற இந்நிகழ்வென்று சனிக்கிழமை(11.01.2025) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக , நீண்ட காலமாகவும் , சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைத்து, வடக்கு கிழக்கு தழுவிய கையெழுத்துக்களைச் சேகரித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடமும், சட்டமா அதிபரிடமும் கையளிக்கவுள்ளதாக போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் இதன்போது தெரிவித்தார்.
தமது இச்செயற்பாட்டின் மூலம் எதிர்வரும்
சுதந்திர தினத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும்
எனவும் போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment