12 Apr 2024

போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வினியோகம்.

SHARE

போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வினியோகம்.

போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம் எனும் தொனிப்பொருளில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டன.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும்யுத்திய மெஹெயுமவிஷேட போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர் தொடர்பான துண்டுப்பிரசுரம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வியாழக்கிழமை(11.04.2024) வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு நகர் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு துண்டுப்பிரசுரம் கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரி கேணல் சனத் அபேதிலக்க தலைமையில்  நடைபெற்றது. கிழக்கு மாகாண புனர்வாழ்வு  நிலையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது

போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம் எனும் தொனிப்பொருளில் பாதசாரிகள் மற்றும் வீதியில் செல்லும் வாகனங்களில் ஸ்டிக்கர் காட்சிப்படுத்தல் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

போதைப்பொருள் தடுப்பு மட்டக்களப்பு  மாவட்ட இணைப்பாளர் .தினேஸ், புனர்வாழ்வு பணியக உத்தியோகததர்கள், மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் வி.ஜெகன் என பலர்  இதன்போது பங்குபற்றியிருந்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: