5 Mar 2024

மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் ஏற்பாட்டில் களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவித்திச் சங்கத்தினால் அப்பகுதியில் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையில் அதன் தலைவர் அகரம் செ.துஜியந்தன் தலைமையில்  நடைபெற்றது.

இதன்போது மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைக்காக பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கிஷோபன், ஆசிரியர் வரதராஜன்அபிவிருத்தி உத்தியோகத்தர் .கேதாகரன், மாற்றுத்திறனாளிகளின் தலைவர் பவளராணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியான கலகட்டத்தில் எமது நிலமையை அறிந்து காலடிக்கே கொண்டு வந்து எமது பிள்ளைகளுக்குரிய கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்த களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவித்திச் சங்கத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.









SHARE

Author: verified_user

0 Comments: