6 Feb 2024

மீனவர் இறங்குதுறை அமைப்பது குறித்து அதிகாரிகள் குழு கள விஜயம்.

SHARE

மீனவர் இறங்குதுறை அமைப்பது குறித்து அதிகாரிகள் குழு கள விஜயம்.

மீன்பிடி மற்றும் விவசாயத்தை ஜீபனோபாயமாகக் கொண்டு  மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீர்வளம், மற்றும் நில வளங்களை முற்று முழுதாகப் பயன்படுத்துகின்றபோது மாவட்டமக்கள் வறுமையிலிருந்து முற்றாக விடுபட்டு உள்நாட்டு உற்பத்திகளையும் அதிகரிக்க முடியும். அவ்வாறு அதிகரிக்கின்றபோது தேசிய ரீதியிலும் பாரிய வருமானங்கள் அதிகரிக்கும்.

இந்நிலையில்  மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியிலிருந்து பெரியகல்லாறு வரையிலான கடற்றொழிலாளர்கள் தமக்குரிய இறங்குறை (துறைமுகம்) ஒன்று இன்மையால் அவர்களது மீன்பிடி படகுகளை நிறுத்த முடியாமல் பெரும் சிரமங்களை மிக நீண்டகாலமாகவிருந்து எதிர்கொண்டு வருவதாக அங்கலாய்க்கின்றனர்.

எனவே இவ்விடையம் குறித்து அப்பகுதி மீனர்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களிடம விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டைக்கல்லாறு  ஓந்தாச்சிமடம், மற்றும் பெரியகல்லாறு  ஆகிய பகுதிகளை அண்மித்ததாகவுள்ள கடற்பிராந்தியத்தில் இணைத்ததாக இயற்கையாகவே அமைந்துள்ள நீரோடையையும் ஒன்றிணைத்து  சிறியரக மீன்பிடி இறங்குதுறை அமைப்பதற்குரிய சாத்திய வளங்களை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு அப்பகுதிக்கு செவ்வாய்கிழமை(06.02.2024) நேரில் விஜயம் செய்து இடங்களைப் பார்வையிட்டுள்ளது.

இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரதிநிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன், கரையோர வளங்கள் பாதுகாப்புத்திணைக்களம், மீன்பிடித் திணைக்களம், உள்ளிட்ட பல அதிகாரிகள் குழு அப்பகுதிக்கு விஜயம் செய்து கள நிலவரங்களைப்  பார்வையிட்டு மீனர்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

ஏதிர்வரும் வாரம் அப்பகுதியில் சிறியரக மீனவர்களுக்குரிய இறங்குதுறை அமைப்பதற்குரிய சாத்தியவள அறிக்கைகள் தயாரிக்கப்படவுள்ளதாக அங்கு விஜயம்செய்து அதிகாரிகள் குழு தெரிவித்திருந்தது.









SHARE

Author: verified_user

0 Comments: