25 Aug 2023

வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு.

SHARE

வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு.

இலங்கையில் நாலா பாகங்களிலும் அனைத்து இன மக்கள் மத்தியிலும் சமூக சேவைகளை மேற்கொண்டுவரும் வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முற்கொட்டான்சேனை அராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், வியாழக்கிழமை(24.08.2023) திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது வன்னிஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர்களான றஞ்சன் சிவஞானசுந்தரம்,(அவுஸ்ரேலியா), வைத்தியர் மாலதி வரன் (அவுஸ்ரேலியா), எம். ரி.எம்.முகமட் பாரீஸ்(இலங்கை) பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சகங்கேஸ்வரன், மற்றும் இணைப்பாளர்களான சீ.ரேகா, ஆர்.கணேசமூர்த்தி, மற்றும், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள். கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட கலரும்  கலந்து கொண்டிருந்தனர்.

அவுஸ்ரேலியாவில் தலைமையாகக் கொண்டு இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், உள்ளிட்ட பல விடையங்களை மேம்படுத்தும் முகமாக தன்னார்வமாக சமூகசேவைகளை மேற்கொண்டுவரும் வன்னிஹோப் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இதன்போது கல்விச் சமூகத்தினர் தமது வாழத்துக்களை இதன்போது தெரிவித்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: