31 Aug 2023

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

SHARE

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தினமான புதன் கிழமை (30.08.2023) அன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  தினமான புதன்கிழமையன்று (30.08.2023) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்  மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்திற்கான பிரதான நிகழ்வு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றதுமட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமான இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது நகரின் பிரதான வீதி ஊடாக சென்று மட்டக்களப்பு காந்தி பூங்காவை அடைந்தது.

இந்நிகழ்வில் அம்பாறை திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தங்களது காணாமல் ஆக்கப்பட்டவர்களது புகைப்படங்களை ஏந்தியவாறும் தமக்கு வேண்டிய தீர்வுகளுக்குரிய பதாகைகளை ஏந்திய வாறும்  இம்மாபெரும். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் தமக்குரிய தீர்வுகளை விரைவில் தரவேண்டும் காலம் கடந்தும் எமக்குரிய தீர்வுகள் கிடைக்க வில்லை  எங்கே எங்கே காணாமல் போன உறவுகள் எங்கே, எமது உறவுகள் எமக்கு வேண்டும் மதவாதம் வேண்டாம். என கோஷங்களை எழுப்பியவாறு இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்பினர்கள் பொதுமக்கள்காணாமல் ஆக்கப்பட்டஊடகவியலாளர் பிரதீப் எத்தினலிகொடவின் மனைவிஇதில் உள்ளிட்டோர்,  கலந்து கொண்டிருந்தனர்.











  

SHARE

Author: verified_user

0 Comments: