3 Oct 2022

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் அவர்கள் கோட்டை கல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள சக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை திங்கட்கிழமை (03) வழங்கி வைத்தார்.

இதன்போது சிறுவர்களுக்கு சிறுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்த அவர், அவரது சொந்த நிதியிலிருந்தே குறித்த கோட்டை கல்லாறு சக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களையும் இனிப்பு வண்ணங்களையும் குறித்த பாலர் பாடசாலைக்கு நேரடியாக சென்று சிறார்களுக்கு வழங்கி வைத்துள்ளார். 







SHARE

Author: verified_user

0 Comments: