முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி
இல்லத்தின்மீது தாக்குதல்.
முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள வீட்டின்
மீது திங்கட்கிழமை(09)மாலை மாலை கல் வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின்
வீட்டின் மீது திங்கட்கிழமை மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போது இந்த
கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வைபவத்தினால் வீட்டின் முற்பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடியொன்று உடைந்து சேதமடைந்துள்ளது.
இச் சம்பவத்தையடுத்து பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில்
காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment