24 Nov 2020

ஊடகவியாலாளர்களுக்கு எதிராக நான் பொலிசில் முறைப்பாடு செய்ததை நிரூபித்தால் 24 மணித்தியாலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்க சவால்.

SHARE

ஊடகவியாலாளர்களுக்கு எதிராக நான் பொலிசில் முறைப்பாடு செய்ததை நிரூபித்தால் 24 மணித்தியாலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்க சவால்.

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை, மைலத்தமடு காணிப்பிரச்சனை தொடர்பில் பண்ணையாளர்கள் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடவியராளர்களை நான் பொலிசில் முறைப்பபடு செய்ததாக சிலர் தெரிவித்திருந்தார்கள், அதுதொடர்பில் சில இணையத்தளங்களிலும் கருத்துக்கள் வெளிவந்திருந்தன. எந்த ஊடகவிலாளர் தொடர்பாகவும் நான் இலங்கையிலுள்ள எந்தப் பொலிஸ் நிலையத்திலாவது முறைப்பாடு செய்திருந்தால், அல்லது வாயால் சொல்லியிருந்தாலும், அதனை யாராவது நிரூபித்தால், 24 மணித்தியாலத்தில் நான் என்னுடைய அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒதுங்குவேன். என்பதை நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன். இதனை அவ்வாறு தெரிவித்தவர்கள், நிரூபிக்க வில்லையாயின் அவர்களுக்கு ரோசம் இருந்தல், அவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டும். 

என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள் அவரது காரியாலயத்தில் திங்கட்கிழமை (23) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

ஒருலெட்சம் வேலைவாய்ப்பு தொடர்பில் என்மீதும் எனது வாகரைப் பிரதேச இணைப்பாளர் மீதும் அவதூறாக இருட்டில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை போலி முகப்பு புத்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோவில் கருத்துத் தெரிவித்த நபரை எமது இணைப்பாளர் நேரில சந்தித்து வெளிச்சத்தில வைத்து வினவியபோது அவரை யாரோ ஒவர் இருட்டில் வைத்து கேள்வி கேட்டதாகவும் அவர் அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கவில்லை எனவும், குறித்த நபர் தெரிவித்துள்ளார். போலி முகமூடிகள், போலி முகப்பு புத்தகத்தை நடாத்துகின்றவர்கள்தான் இவ்வாறு எம்மீது அவதூறு செய்து வகின்றார்கள். இவ்விடையம் குறித்து எனது வாகரைப் பிரதேச இணைப்பாளர் அமலன் வாகரைப் பொலிஸ் நிலையத்தில முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டுக்கு அமையாக குறித்த வீடியோவில் கருத்துத் தெரிவித்த நபர் பொலிசாரால் வரவளைக்கப்பட்டு வாக்குமூம் தெரிவித்துள்ளார். அதிலே ராஜன் என்பவர் அவரை இருட்டிலே அழைத்து அவருடைய மனைவியின் மருத்துவச் செலவுக்காக பணம் தருவதாகத் தெரிவித்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனைப் பற்றி பிழையாகக் கூறும்படி கேட்டுக் கொண்டதாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விடையத்தை நாம் நீதிமன்றம்வரைக் கொண்டு செல்லவுள்ளோம். 

ஒருலெட்சம் வேலைவாய்பு தொடர்பில் அண்மையில் கருணா அம்மான் பேசினார், அதபோல் நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி பேசினார். இதன் பிரதிபலிப்பாக  போலி முகப்பு புத்தகத்தில் தற்போது பேசப்பட்டுள்ளது. அதனை நாம் தற்போது வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளோம். நான் பிழை விட்டிருந்தல் அதனை நான் ஏற்கத் தயார். ஆனால் போலி நாடகம் ஆடுபவர்கள், எந்தப் பின்புலத்தில் இருந்தாலும், வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதனை நாம் இனிமேலும் அனுமதிக்க முயடியாது. 

அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்ச்சிதான் எம்மைப்பற்றி இவ்வாறு போலி முகப்பத்தகங்களில் எழுதுகின்றார்கள். எம்மீது குற்றங்கள், இருந்தால் நேரடியாகப்பேசுவதற்கு நாம் தயார். எப்போதம், உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது. இன்னும் பல போலி முகங்கள் வெளிச்சத்திற்கு வரும்.

இரண்டு அமைச்சுப் பதவி வழங்கப்பட போவதாக வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளது. இதுவிடையம் தொடர்பில் எமக்குத் தெரியாது. அது தொடர்பில் ஜனாதிபதிதான் முடிவெடுப்பார். 

தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றி நான் எப்போதும், எங்கும், எந்த நேரத்திலும் தவறாக ஒரு வார்த்தைகூட பேசவும் இல்லை இனிமேலும் பேசப்போவதும் இல்லை. ஆனால் தற்போது அரசாங்தக்தில் அமைச்சாராக இருக்கின்றோம் என்பதற்காக ஒட்டுமொத்த எமது மக்களையும் அடமானம் வைத்து விட்டு இருக்கவில்லை. இந்த பலம்பொருந்திய அரசாங்கத்திலிருந்து எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக்கூடிய அனைத்து விடையங்கள் தொடர்பிலும் நாம் வேலை செய்து கொண்டிருக்கின்றோம். 

மாவீரர் நாள் தொடர்பில் சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. என்னைப் பொறுத்தவரையில் பலர் தமது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் இழந்துள்ளார்கள். அவர்களது உறவுகளுக்கு ஆத்மார்த்தமான ஒரு பிராத்தனையை செய்வதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. அதற்கு நாங்கள் எப்போதும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது நீதிமன்றக் கட்டளையை மீறி நாம் எதுவும் மேற்கொள்ள முடியாது. அவர்கள் சமூகத்தின் விடுதலைக்கான கனவுடன் போராடினார்கள் அவ்வாறான குடும்பங்களுக்கு நாம் பல உதவிகளை வழங்கி வருகின்றோம். அதுவும்போதாதுள்ளது.

2015 ஆம் ஆண்டிலிருந்து எவ்வாறு தமிழ் மக்கள் சார்ந்து குரல் கொடுத்தோமோ அதே நிலையிலிருந்து தற்போது வரைக்கும் நாம் மாறாமல் செயற்பட்டு வருகின்றோம். ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படும்போது களத்திலிறங்கியும் நாடாளுமன்றம் வரைக்கும் குரல் கொடுத்தவன் நான். மாதவனை, மைலத்தமடு காணிப்பிரச்சனை தொடர்பில் பண்ணையாளர்கள் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடவியராளர்களை நான் பொலிசில் முறைப்பாடு செய்ததாக சிலர் தெரிவித்திருந்தார்கள், அதுதொடர்பல் சில கருத்துக்கள் இணையத்தளங்களிலும் வெளி வந்திருந்தன. எந்த ஊடகவிலாளர் தொடர்பாகவும் நான் இலங்கையிலுள்ள எந்தப் பொலிஸ் நிலையத்திலாவது முறைப்பாடு செய்திருந்தால், அல்லது வாயால் சொல்லியிருந்தாலும், அதனை யாராவது நிரூபித்தால், 24 மணித்தியாலத்தில் நான் என்னுடைய அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒதுங்குவேன். என்பதை நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன். இதனை அவ்வாறு கூறுபவர்கள் நிரூபிக்க வில்லையாயின் அவர்களுக்கு ரோசம் இருந்தல், அவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும். 

நான் எந்த பொலிஸ் நிலையத்திற்கும் சென்று எந்த ஊடகவியாலாளர் தொடர்பிலும் முறைப்பாடு தெரிவிக்கவில்லை. இது தொடர்பில் எதுவும் அறியாமல் தீர விசாரிக்காமல், எங்கேயோ முகப்புத்தகத்தில் வந்த தகவலை வைத்துக் கொண்டு, சிலர் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். அரசியல்வாதி என்றால் ஓரளவு தலையில் கனம் இருக்க வேண்டும். இவ்வாறானவர்களை நினைத்து நான் வேதனையடைகின்றேன். 

வன இலாகா, தொல்பொருளியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் உள்ளிட்ட பலர், கொழும்பிலே இருந்து கொண்டு, கூகுள் வரைபடத்தைப் பார்த்துக் கொண்டு கிழக்கிலே நிருவாகம் செய்கின்றார்கள். அவர்கள் எல்லைக்கள் இடுகின்றார்கள், ஆனால் அவர்கள் இங்குள்ள அரச நிருவாகத்திற்குத் தெரியாமல்தான் இதனை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் பலதடவை இடம் பெயர்ந்தவர்கள். மக்கள் குடியிருப்புக்களிலும், வாழ்வாதார இடங்களிலும், வன இலாகா எல்லைக் கல் இடுவதை தீர்மானிக்க முடியாது. இதனை இங்குள்ள அரச நிருவாகத்தினுடாக செயற்பட வேண்டும். இதனால் எமது மக்களின் வாழ்வாதாரக் காணி, குடியிருப்புக்காணி என்பனவெல்லாம் பறிபோகின்றது. இதனை நாம் அனுமதிக்க முடியாது. இதனை ஜனாதிபதி மட்டத்தில் கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: