அமைதியான முறையில் மட்டக்களப்பில் வாக்களிக்கு இடம்பெற்றிருக்கின்றது.
சனிக்கிழமை (16.11.2019) நடைபெற்ற இலங்கையின் 8 வது சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காகன தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளதாக சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்… மாவட்டத்திலிருந்து வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 398301 வாக்களர்களில் இம்மாவட்டத்தில் 77 வீதத்திற்கு அதிகமாக வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் மக்கள் சுமுகமான மறையில் எதுவித பெரியளவிலான முறைப்பாடுகளுமற்ற நிலையில் நடைபெற்று முடிந்திருக்கின்றது.
தற்போது வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையமாகவுள்ள மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. வாக்கெண்டும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என அவர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் சர்வசன வாக்கெடுப்பு திட்டமிட்டபடி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற்றிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 94,645 வாக்காளர்களும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 187,682 வாக்காளர்களும், கல்குடா தேர்தல் தொகுதியிலிருந்து 115,974, வாக்கதளர்களும் மாவட்டத்தில் அமைந்துள்ள 428 வாக்கெடுப்பு நிலையங்களில், மொத்தமாக 398301 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். வயோதிபர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களும் அடங்கலாக அனைவரும் வாக்களிப்பதற்கு ஏதுவான சகல ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டிருந்தன.
தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகஸ்;கள் கடையில் ஈடுபட்டுள்ளனர் அதில் 1800 உத்தியோகஸ்த்தர்கள் வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை பாதுகாப்பு கடமைகளுக்காக 1688 காவல்துறை உத்தியோகத்தர்களும், 320 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைப்பட்டுள்;ளனர். ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் கணக்கெடுப்பு நிலையங்களுக்காக இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர போக்குவரத்துப்பணியில் விசேட காவல்துறைப் பிரிவினர் பங்கெடுதிருந்தனர்.
மட்டக்களப்பில் தேர்தல் மத்திய நிலையமாகக் காணப்படும் இந்துக்கல்லூரியில் வாக்கெண்ணும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27 நிலையங்கள் சாதாரண வாக்கெண்டும் நிலையங்களாகவும், 7 நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment