19 Jun 2018

மட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்

SHARE
உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான வைத்தியப் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை 17.06.2018 மாநகர மண்டபத்தில் நடைபெற்றது.
புளியந்தீவு, கோட்டைமுனை, மாமாங்கம், வெட்டக்காடு, இருதயபுரம், கொக்குவில், கல்லடி, நாவற்குடா, வலையிறவு, திருப்பெருந்துறை சுகாதாரப் பிரிவுகள் மற்றும் பொது சேர்மக் குழு, டெங்குக் குழு ஆகியவற்றில் கடடைபுரியும் சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதாரத் தொழிலாளர்களுக்கு இரத்த அழுத்தம், குருதியில் உள்ள சீனியின் அளவுகள் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகளுடன் நோய்களுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவல்கள் அலுவலக வைத்திய சுகாதார அதிகாரி எஸ். கிரிசுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், சுகாதாரப் பிரிவின் உத்தியோகத்தர்கள், தாதியர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வோரு காலாண்டு அல்லது அரையாண்டு இடைவெளியில் குறித்த மருத்துவ முகாம் கிரமமாக இடம்பெறும் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: