16 May 2018

களுதாவளை மகா வித்தியாலய மாணவன் ஜனுஸ்கன் சர்வதேச கணிதப் போட்டியில் கலந்து கொள்வதற்கு சிங்கப்பூர் செல்லத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

SHARE
மட்.பட்.களுதாவளை மகா வித்தியாலய மாணவன் தில்லையம்பலம் ஜனுஸ்கன் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஆங்கில மொழிமூலமான கணித போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்று சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் சர்வதேசப் ஆங்கில மொழிமூலமான கனிதப் போட்டியில் (ஐவெநசயெவழையெட ஆயவாள ஞரணை) பங்குபெற தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மட்.பட்.களுதாவளை மகா வித்தியாலய நிருவாகம் புதன் கிழமை (16) தெரிவித்துள்ளது.
சர்வதேச கணித அறிவுப் போட்டியை முன்னிட்டு கடந்த 10.05.2018 அன்று  மட்.தெரேசா மகழிர் பாடசாலையில் இப்போட்டிப் பரீட்சை நடைபெற்றது. 

தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையுள்ள மாணவர்களுக்கு நடைபெற்ற இப்போட்டிப் பரீட்சையில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் தில்லையம்பலம் ஜனுஸ்கன் என்ற மாணவனே இவ்வாறு இப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டு சிங்கப்பூர் செல்லவுள்ளார்.

தமது வித்தியாலய மாணவனின் இத்திறமையினால் பாடசாலைக்கும், களுதாவளை மண்ணுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும், இம்மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: