போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில்; அதிகம் காட்டு யானைகள் ஊடுருவும் கிராமமான யானைகட்டியவெளி எனும் கிராமத்தில் அடிக்கடி யானைகள் வரும் இடத்தை மக்களுடாக அடையாளப்படுத்தி அப்குதியில் 500 மீற்றர் தூரத்திற்கு கேபிள் கம்பி பொருத்தி அதில் 20 மீற்றர் இடைவெளியில் தூண்கள் அமைத்து அதிலே சிறிய நிழல்பந்தலிட்டு, அவற்றினுள், தேன் கூட்டு பெட்டிகளைப் பொருத்தும் செயற்பாட்டில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்துள்ளது.
இச்செயற்றிட்டத்தை உத்தியோக பூர்வமாக புதன்கிழமை (14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த செயற்றிட்டதினூடான இரண்டு விதமாக யானைகளைக் கட்டுப்படுத்தலாம் என நம்பப்படுகின்றது. ஒன்று தேன் பூச்சுகளின் இங்… இங்… இங்…. என்கின்ற ஒரு வித இரைச்சல் யானைகளின் காதுகளுக்குப் பொருந்தாது இந்நிலையில், வரும் யானைகள் திரும்பிச் செல்லும்.
அடுத்து யானை குறிப்பிட்ட 500 மீற்றர்தூர இடைவெளியில் ஏதாவது ஒரு இடத்தினால் கடக்க முற்படும் வேளையில் யனையின் உடம்பு அந்த கேபிள்கம்பியில் பட்டவுடன் அனைத்து தேன்கூடுகளும் அசைந்து தேன்பூச்சுக்கள் யானைகளைத் தாக்கும்;. இதனால யானை மிரண்டு திருப்பி ஓடிவிடும்.
இந்த இரண்டு செயற்பாடுகளினாலும் யானைகள் கிராமத்திற்குள் வருவது நிறுத்தப்படும். என நம்பப்படுகின்றன.
இச் செயற்றிட்டத்தினால் யானைகட்டியவெளி கிராமத்திலுள்ள 20 குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு தேன் கூடுகள் வீதம் தெரிவு செய்து குறித்த தேன் கூடுகளைப் பராமரிக்கும் பெறுப்பு அவர்களிடத்தில் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை சுத்தமான தேனையும் அவர்கள் அதிலிருந்து பெற்று அவர்கள் வருமானத்தையும் ஈட்டிக் கொள்ள முடியும். இதற்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் துறைசார்ந்தவர்களைக் கொண்டு வழங்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை திட்டமிட்டுள்ளது.
இச்சொயற்பாடு ஆபிரிக்க நாடுகளில் வெற்றியளித்துள்ள நிலையில். இலங்கையில் முதன்முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள யானைகட்டியவெளி எனும் கிராமத்தில்தான் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்செயற்பாட்டினால் குறிப்பிட்ட பகுதிக்குள் காட்டுயானைகள் ஊடுருவாமலிருந்து இது வெற்றியளித்தால் இச்செயற்றிட்டத்தை மேலும் விஸ்த்தரிக்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
எது எப்படி இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் காட்டு யானைகள் மக்களின் வீடுகளையும், பயிர்களையும் அழிப்பதை இனிமேலும் கட்டுப்படுத்தவில்லையாயின் அப்பகுதியிலுள்ள காட்டுயானைகளின் அட்டகாசத்திற்குட்படும் மக்கள் தமது சொத்துக்கள் அனைத்தினையும் விட்டு, விட்டு கடந்த யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்தது போல மேலும், இடம்பெயர் வேண்டிய நிலமை ஏற்படும் எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment