காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி உப்போடைப் பகுதியில் வியாழக் கிழமை (05) இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 125 பவுண் தங்க நகைகளும் 1 இலட்சம் பெறுமதியான இலங்கைக் காசும் 1 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டுக் காசும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டு உரிமையாளர்கள் வியாழக் கிழமை மாலை வேலை நிமித்தம் வெளியில் சென்ற சமயம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டின் ஒரு பகுதியின் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த திருகோணமலையைச் சேர்ந்த 3 நபர்கள் இச் சம்பவத்துடன் தொடர்பு பட்டுள்ளதாகவும் சம்பவம் இடம்பெற்ற வேளை வீட்டின் கதவினை உடைத்து சந்தேகம் ஏற்படாதவாறு வீட்டினுள்ளும் வெளிப்பகுதியிலும் அதிகளவிலான மிளகாய்த் தூள்களைத் தூவி அங்கிருந்த காவல் நாயினை கவனத்தை திசை திருப்பி திரைப்படப் பாணியில் இக்கொள்ளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் வீட்டின் உரிமையாளர்கள் வரமுன் வாடகைக்கு இருந்த அறைகளைப் பூட்டி விட்டு கொள்ளையிடப்பட்ட நகைகளுடன் தலைமறைவாகியுள்ளனர். அதன் பின் வீட்டு உரிமையாளர்கள் பொலிசுக்கு வழங்கிய தகவலையடுத்து உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட காத்தான்குடிப் பொலிஸார் சந்தேக நபர்களை வாகரையில் வைத்து கைது செய்துள்ளனர். திருடப்பட்ட நகைகள் சம்பந்தமாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment