வடகிழக்கு மாகாணத்தின் முதலாவது மேல் நீதிமன்ற பெண் நிதிபதி என்ற சிறப்புக்குரிய ஒய்வு பெற்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி அவர்கள் இன்று வெல்லாவெளி பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அவ்வேளையில் அவரைக் கண்ட பொலிஸ் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மரியாதை செலுத்தி உரையாடுவதை காணக் கூடியதாக இருந்தது. அவ்வாறான உரையாடல்கள் அவரின் சிறப்பான சேவை பற்றியதாகவே அமைந்திருந்தது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் அவருக்குரிய மரியாதையை பார்த்து வியந்து நின்றனர். இந் நிலையில் ஊடகவியலாளர் ஒருவர் அம்மணி நீங்கள் நீதித்துறையில் இருக்கும்போது மிகவும் நேர்மையுடன் செயற்பட்டிருந்தீர்கள்! கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தளவில் நீங்கள் எங்களுக்கு பெரிய வளம், எனவே உங்களைப் போன்றவர்கள் எமது தமிழ் மக்களின் நன்மை கருதி எதிர்காலத்தில் அரசியலில் இறங்க வேண்டும் என ஒரு ஊடகவியலாளர் கேட்டிருந்தார். அதற்கு அவர் பதிலளிக்கையில் அது பற்றி நான் முடிவெடுக்கவில்லை யோசிப்போம் என்றார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர அவர்களுடன் சில விடயங்களை முன்வைத்து உரையாடியதை அவதானிக்க கூடியதாக இருந்தது. ஒரு துணிவான பெண்மணி என்பதனை அறியக் கூடியதாக இருந்தது.
0 Comments:
Post a Comment