1 Aug 2017

வெல்லாவெளியில் முப்பத்தொரு வருடங்களின் பின்பு ஒரு கோடி ரூபா நிதியில் பொலிஸ் நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

SHARE
வெல்லாவெளி பொலிஸ்நிலையம் முப்பத்தொரு வருடங்களின் பின்பு  சனிக்கிழமைசனிக்கிழமை (29) பொதுமக்களின் தேவைக்காகவும்,வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் திறந்துவைக்கப்பட்டது


 வெல்லாவெளியில் உள்ள பொலீஸ் நிலையமானது கடந்த யுத்தத்தினால் அழிவடைந்தது. இதனால் 1970 ஆண்டு முதல் வெல்லாவெளி பொலீஸ் நிலையமானது 11 தமிழர்களின் வீடுகளில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கு பின்பு சட்டமும்,ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி  அமைச்சின் வழிகாட்டல்களில் ஒரு கோடி ரூபா நிதியில் கட்டிமுடிக்கப்பட்டு  பழைய பொலீஸ் நிலையம் இருந்த அதே இடத்தில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மாதிபர் யாகொட ஆராச்சி தலைமையில் பொலிஸ்மாதிபர் பூஜித ஜயசுந்தர அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்,பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீரலி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராஜா,ஞா.கிருஸ்ணப்பிள்ளை, பிரதி பொலீஸ்மாதிபர்,மாவட்ட அத்தியட்சகர்,உதவி பொலீஸ் அத்தியட்சகர்கள்,மாவட்ட அரச அதிகாரிகள்,மதப்பெரியார்கள் கலந்து கொண்டு மக்களின் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது.


இப் பொலிஸ் நிலையத்தில் ஆயுத களஞ்சியம், பொறுப்பதிகாரி அலுவலகம்,கடமை பொலிஸ் உத்தியோகஸ்தர் அலுவலகம், இரண்டு சிறைக்கூடங்கள்,தொலைபேசி இயக்குனர் அலுவலகம்,பொலிஸ் விடுதி அலுவலகம் உட்பட கட்டிடத்தொகுதி என்பன உள்ளடக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.இப்பொலிஸ் நிலையத்தினால் முப்தொரு ஆயிரம் பொதுமக்களுக்கு பொலிஸ் சேவை கிடைக்கப்பெறவுள்ளது.





SHARE

Author: verified_user

0 Comments: