ஏறாவூர், மாவடி வீதியில் சுமார் 3 அடி நீளமான சிறிய முதலையொன்று மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 28.07.2017 உயிருடன் மீட்கப்பட்டது.
அப்பகுதியில் முதலையொன்று அநாதரவாகக் கட்டப்பட்டக் கிடப்தாக தகவல் கிடைத்ததை அடுத்து ஸ்தலத்திற்குச் சென்று அதனை மீட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட முதலை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது.
தற்சமயம் பிரதேசத்தில் உள்ள குளம் குட்டைகள் வறட்சி காரணமாக வற்றி வருவதால் முதலைகள் வறண்டு போன குளம் குட்டைகளிலிரந்து வெளியேறியிருக்கலாம் என்று சூழிலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment