26 Jul 2017

புளுகுணாவை குளத்தில் மீனவர்கள் மீது தாக்குதல், வலைகள் தொலைபேசிகள் அபகரிப்பு

SHARE
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுகுணாவை குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு மீனவர்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டதுபற்றி தாம் விசாரணைகளைத் துவங்கியுள்ளதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.


செவ்வாய்க்கிழமை மாலை (25.07.2017)  இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் தாந்தாமலை கிராம மீனவர் சங்கத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

புளுகுணாவை குளத்தில் மாலைவேளையில்  மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே, இனந்தெரியாதோர் தம்மை தாக்கியவிட்டு, தம்மிடம் இருந்த மீன்பிடி வலைகள் மற்றும் தொலைபேசிகளையும் பறித்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அங்குள்ள மீனவர்களிடையே பதற்ற நிலையேற்பட்டதாகவும் கூறபப்டுகின்றது.இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றினை  பதிவு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தாம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: