மட்டக்களப்பு மாவட்டம் தும்பங்கேணிப் பகுதியில் தடாகம் அமைத்து மீன் வளர்ப்பில் இடுபடும் மீனவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக அவர்களுக்கு கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சினால், செவ்வாய் கிழமை (25) காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது இப்பகுதியில் தடாகங்களில் மீன் வளர்பில் ஈடுபட்டுவரும் 10 பேர் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா 10000 ரூபா வீதம் வழங்கப்பட்டன.
தும்பங்கேணி மீன்பிடி சங்கத்தின் தலைவர் எஸ்.விஜயராசா தலைமையில் தும்பங்கேணியில் அமைந்துள்ள பொதுக்கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சின் செயலாளர் க.சிவநாதன், மீன்பிடி திணைக்களத் திபணிப்பாளர் எஸ்.சுதாகரன், மற்றும், தடாக மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment