இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பஸ் அம்பாறை –கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனுமிடத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 35 பேர் காயமடைந்துள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி, பயணித்த பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியருகே குடைசாய்ந்து விழுந்துள்ளது.
புதன்கிழமை 26.07.2017 இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சம்மாந்துறை, அம்பாறை, கல்முனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம்பற்றி சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment