26 Jul 2017

திக்கோடையில் புதிய வைத்தியசாலைக்கு அடிக்கல் நட்டுவைப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் அமையவிருக்கும் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு வைத்தியசாலைக் கட்டடத்துக்குரிய அடிக்கல் செவ்வாய்க் கிழமை (25) நடப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்குத்துக்குமான திட்டத்தின்கீழ், 8079690 ரூபா நிதியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் இவ்வைத்தியசாலைக் கட்டடம் நிருமாணிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி.கிறேஸ் நவரெட்ணராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபையஜன’ பஜரதித் தவிசாளர் இ.பிரசன்னா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக ஞா.கிருஷ்ணபிள்ளை, கோ.கருணாகரம், மா.நடராசா, இரா.துரைரெத்தினம், மற்றுமு; கிழக்கு மகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் க.முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதிய வைத்தியசாலைக்குரிய அடிக்கல்லை நட்டு வைத்தனர்.














SHARE

Author: verified_user

0 Comments: