ஏறாவூர்ப்பற்று செயலகப் பிரிவில் உள்ள பன்குடாவெளி கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள தளவாய் கிராமத்தில் தாய் தந்தையரை இழந்து அம்மம்மாவின் பராமரிப்பில் வசித்துவரும் புவனேந்திரன் டிலிஜா மற்றும் புவனேந்திரன் டிலிசான் ஆகிய இரு பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக அஹிம்சாவின் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
அஹிம்சாவின் தலைவர் வி.விஜயராஜா, மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புத் தலைவரும் அஹிம்சாவின் ஆலோசகருமான த.வசந்தராஜா, நிர்வாகசபை உறுப்பினர் க.விஷ்வநாத் மற்றும் தளவாய் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஆர். நவச்செல்வம் ஆகியோர் முன்னிலையில் அஹிம்சாவின் தொண்டர் வி.பிறேம்குமாரினால் பாடசாலை மாணவர் இருவருக்கும் அத்துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது
0 Comments:
Post a Comment