( டினேஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (16) மாலை வீசிய பலத்த காற்றினால் பல மரங்கள் முறிந்து சோமடைந்துள்ளன.
அந்த வகையில் மட்.பட்.பெரியபோரதீவு பாரதி விதியாலத்திற்கு இக்காற்றினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வித்தியாலய அதிபர் க.இராசகுமாரன் சனிக்கிழமை (17) தெரிவித்தார்.
வித்தியலய வளாகத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நின்ற நாவல் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதனால் வித்தியாலயத்தின் சுற்றுமதிலின் ஒரு பகுதி முற்றாக உடைந்து சேதடைந்துள்ளது.
இந்நிலையில் வித்தியாலயத்தின் நூலகக் கட்டத்தின் அருகில் நூறு வருடங்களுக்கு மேலாக நின்ற இலுப்பை மரம் முறிந்து விழுந்ததில் கட்டடத்தின் ஒரு பகுதி பலத்த சேதடைந்துள்ளது.
பாடசாலைக்கு ஏற்பட்டுள்ள இந்நிலமை தொடர்பில் கிராம சேவை உத்தியோகஸ்த்தர், கோட்டக்கல்வி அதிகாரி, வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக மட்.பட்.பெரியபோரதீவு பாரதி விதியாலய அதிபர் க.இராசகுமாரன் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment