17 Jun 2017

மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியில் புதிய ஆண்டுக்கான கற்கை நடவடிக்கைகள் ஆரம்பம்.

SHARE
(தாஸ்)

2014 ஆம் ஆண்டு .பொ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி கல்வியியற் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்ட, புதிய ஆசிரியர் பயிலுனர்களை பதிவு செய்யும் நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை(21) இடம்பெறும் என, மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

ஆரம்பக்கல்வி மற்றும் நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கு தலா முப்பதும் விஞ்ஞானம் மற்றும் உடற்கல்விப் பாட நெறிகளுக்கு தலா ஐம்பதும் கலையும் கைப்பணியும் மற்றும் சித்திரம் ஆகிய பாடங்களுக்கு பதினைந்தும் வடிவமைப்பு தொழிநுட்ப பாடநெறிக்கு 45 பேருமாக ஏழு பாட நெறிகளுக்கும், இவ்வருடம் மொத்தமாக இருநூற்றிமுப்பத்தைந்து பயிற்சி பயிலுனர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

மேற்குறித்த தினத்தில் பதிவுகளை மேற்கொள்ளும் பயிலுனர்களுக்கான வகுப்பறை கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கையிலுள்ள தமிழ் மொழி மூலமான பாடநெறிகளைக் கொண்டுள்ள கல்வியியற் கல்லூரிகளில்,ஒப்பீட்டளவில் அதிகமான முதல்நிலை ஆசிரியர்களை பயிற்சிக்கென உள்வாங்குவது இக்கல்வியியற் கல்லூரியே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இத்தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுனர்களின், பெற்றோர்களுக்கான விசேட செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை(17) காலைமணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
SHARE

Author: verified_user

0 Comments: