18 Jun 2017

வட மாகாண சபை குழப்பத்திற்கு காரணம் சேனாதிராஜா

SHARE
தற்போதைய நிலையில் எந்த பக்கமும் விக்னேஸ்வரன் சார்ந்து நிற்பது நல்லமல்ல அவர் பொதுவாக இருந்து கொண்டு தமிழரசு கட்சி தவிர்ந்த  அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி  ஒற்றுமையாக செயற்படவருமாறு பகிரங்க அழைப்பு விட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.அனந்தசங்கரி தெரிவித்தார்.


வடமாகாண சபை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் ஞாயிற்றுக் கிழமை (18) தொடர்பு கொண்டு கெட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

 இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்பே தமிழரசுக் கட்சியினை தந்தை செல்வா அவர்கள் மூடிவைத்துவிட்டார்  2004 ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாதான் அதற்கு உயிர் கொடுத்தார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் மறுமலரச்சி கழகம், ஊடகவியலாளர்கள், வடகிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர்கள் புத்தி ஜீவிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ், ஒரே கொள்கையில், ஒரே சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றதன் அடிப்படையில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயாராக இருந்த வேளையில் சம்பந்தன் அவர்களும், சேனாதிராஜா அவர்களும் சேர்ந்து குழப்பியடித்துத்தான்  தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டனர். அதன் விளைவு என்னவென்று தெரியுமா? நான் சொன்னால் எவரும் புரிந்து கொள்ளமாட்டீர்கள், அன்று ஒற்றுமையாக தேர்தலில் போட்யிட்டிருந்தால் தமிழர் அனைவரும் ஒரேகட்சியில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுருப்பார்கள், நாங்கள் பலமடைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருக்கும் யுத்தம் நின்றிருக்கும் எந்தவித அழிவையும் நாங்கள் சந்தித்திருக்க மாட்டோம். சேனாதிராஜாவும் சம்பந்தனும் செய்த தெருக் கூத்தால இந்த அழிவு ஏற்பட்டது இதற்கு அவர்களே பொறுப்பு. இது பதவியினால் ஏற்பட்ட விளைவுகள் இதுதான் உண்மைநிலை.இந்த நிலையை குழப்பாமல் இருந்திருந்தால் தமிழ் மக்கள் சார்ந்த ஒரு கட்சிக்கு விடுதலைப்புலிளே இன்று தலைவனாக  இருந்திருப்பார்கள் 
  
 விடுதலைப்புலிகளின் தலைவர் கூறிய கருத்து நேற்று வரைக்கும் எமக்கு மாறாக நின்றவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். தமிழர் எல்லாம் ஒரே கட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதனைக் கூறியிருந்தார். இதனைக் குழப்பிய பெருமை தம்பி சேனாதிராஜாவே சாரும். நான் இறந்து போனாலும் ஏன்றோ ஒருநாள் நான் கூறிய கருத்தை மக்கள் நினைவுகூருவார்கள். ஒரு நாடாளுமன்றத்  தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தான் முதற்மை வேட்பாளராக வரவேண்டும் என்று அடம்பிடித்தார். இது போன்ற பதவியாசை சம்பவங்கள் பலவற்றை எடுத்துக் கூறிக்கொண்டு போகலாம். இவ்வாறு எல்லாம் தான்தான் வரவேண்டும் என்ற போக்கே  இன்று  வடக்கு மாகாண சபை குழப்பமும்  உருவாகியிருக்கின்றது. இந்த குழப்பத்திற்கு காரணம் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருப்பது சேனாதிக்கு விருப்பம் இல்லை. காரணம் தன்மை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தயாராக இருந்த வேளையில் அதனை நிறுத்தி அவர் முதலமைச்சராகி விட்டார் என்ற கோபம்தான் இதற்கு காரணம்.


முதலமைச்சருக்கு  தற்பொழுது இதைவிட வேறு ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது அதுதான் சித்தாத்தன், அடைக்கலநாதன், சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் அவரிடம் சென்று ஒற்றுமை கொண்டாடுகின்றனர். அவர் இந்த விடயத்தில் மிகவும் நிதானமாக பொதுவாக நடந்து கொள்ள வேண்டும். இதன் பிற்பாடு தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது ஆரோக்கியமான தல்ல அவ்வாறு சென்றால் பதவி ஆசைக்காக சென்று விட்டார் என்ற பெயரை சுமக்க வேண்டும். எனவே தற்போதைய நிலையில் எந்த பக்கமும் விக்னேஸ்வரன் சார்ந்து நிற்பது நல்லமல்ல அவர் பொதுவாக இருந்து கொண்டு தமிழரசு கட்சி தவிர்ந்த  அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி ஒற்றுமையாக செயற்படவருமாறு பகிரங்க அழைப்பு விட வேண்டும். இதுவே சிறந்த ஆரோக்கியமாக இருக்கும் இதனை எமது தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி  அவர் மேற்கொள்ள வேண்டும். அவரின் தலமைத்துவத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும. இதுதான் எனது நிலைப்பாடாகும். தற்பொழுது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு நல்லதல்ல என அவர் இதன் போது தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: