12 Mar 2017

தேர்தல்கள் சிறந்த முறையில் இடம் பெற்றாலும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் நேர்மையற்று நடக்கின்றனர் - பவ்ரல் பணிப்பாளர் ரோஹண கெட்டியாராச்சி

SHARE
தேர்தல்கள் சிறந்த முறையில் இடம் பெற்றாலும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் நேர்மையற்று நடக்கின்றனர். இதை மாற்றியமைக்கும் படியாக 2013 ம் ஆண்டு தொடக்கம் இந்த மாரச் 12 இயக்கம் செயற்பட்டு வருகிறது என பப்ரல் அமைப்பின்  பணிப்பாளர்  ரோஹண ஹெட்டி ஆராச்சிதெரிவித்தார்.


மார்ச் 12 அமைப்பினால் எதிர்வரும் மார்ச் 24ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ள தேசிய பேரணி மற்றும் இறுதி நிகழ்வை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி செயற்படுத்தும் வகையில் மாவட்ட செயற்குழு அமைத்தல்; தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரதம அதிதியாக மட்டக்களபபு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  எஸ். கிரிதரன் கலந்து கொண்டார். அத்துடன், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற ஆணையாளர்; சகல உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள், அரச ஸ்தாபன உத்தியோகத்தர்களின் ஒன்றியங்களின் அங்கத்தவர்கள், பொலிஸ் அதிகாரிகள்  சிவில் அமைப்பு பிரதிநிதிகள், சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,
03 தசாப்த காலங்களில் பப்ரல் அமைப்பானது இதுவரையும் 45 தேர்தல்களில் தனது கண்கானிப்பு பணியை மேற்கொண்டுள்ளது. இவ் தேர்தல்கள் சிறந்த முறையில் இடம் பெற்றாலும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் நேர்மையற்று நடக்கின்றனர்.

இதை மாற்றியமைக்கும் படியாக 2013 ம் ஆண்டு தொடக்கம் மதத் தலைவர்கள் , மக்கள் பிரதிநிதிகள் , அரச அதிகாரிகள் , ஊடகவியலாளர்கள் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் , வர்த்தக சமூகத்தவர்கள் , போன்ற சமூகத்தின் பல் வேறு அமைப்புக்களுடன் தொடர் கலந்துரையாடல் நடாத்தப்பட்டு அதன் பொருட்டு 8 அம்ச நியதிகளை உள்ளடக்கியதான மார்ச் 12 பிரகடனம் 2015.03.12 ம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ல் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களும் எதிர் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களும் 17 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிடப்பட்டு மக்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

மார்ச் 12 இயக்கத்தின் பங்குதாரர்களாக சர்வோதயா, பவ்ரல், ரான்ஸ்பெரன்சி இன்ரர்நசனல்,  இலங்கை உள்ளுராட்சி உறுப்பினர்களின் மன்றம், சனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான அமைப்பு, ரைற்ஸ் நவ் மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு,  இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை தாதியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம்,  செடெக் நிறுவனம், தாய் மண்ணில் அன்னையரும் புதல்வியரும் அமைப்பு, இலங்கை இளைஞர் முஸ்லிம் சங்க சம்மேளனம், இலங்கை உள்ளுராட்சி சம்மேளனம், அத்துடன் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனுடன் இணைந்து செயற்படுகின்றனர்.

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது தொடர்பான விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது சிறந்த அரசியல் கலாச்சாரம் உருவாகி வருகின்ற நிலைமையை காணமுடிகிறது எனக் கூறினார். அத்துடன் இவ் மார்ச் 12 இயக்கமானது சகல மக்களுக்கும் சமூக குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசியல் பிரதிநிதிகளிடத்தில் இப் பிரகடனம் தொடர்பாக கவனயீர்ப்பினைஉருவாக்கும் பொருட்டு தேசியமட்ட பேரணி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

நாட்டின் அரசியல்காலாச்சாரத்தினை மாற்றும் நோக்கில் ஊருவாக்கப்பட்ட மார்ச் 12 தேசிய பேரணியொன்று நாளை 13ஆம் திகதி ஆரம்பமாகி நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் சென்று  வாகனப்பேரணியாகச் சென்று விழிப்புணர்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இது எதிர்வரும் 13.03.2017 திகதியன்று கம்பஹா மாவட்டத்தில் மோட்டார் பேரூந்து தொடரணியாக முன்னெடுக்கப்பட்டு 24.03.2017 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அம் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையின் கீழ் மாவட்ட ரீதியாக குழுக்களை அமைத்து இது தொடர்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மட்டக்களப்பு மாவட்ட மட்ட ஆலோசனைக்கூட்டங்கள் நாளை 13ஆம் திகதி முதல் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளன.

இதன் முதலாவது கூட்டம் நாளை 13ஆம் திகதி மண்முனை வடக்கு பிரதேச செயலக டேர்பா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 14ஆம்திகதி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலும், அதனையடுத்து ஏறாவூர் பற்று, கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர்பிரிவுகளிலும் நடைபெறவுள்ளன.

பொலநறுவை மாவட்டத்திலிருந்து வரும் பேரணி மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் வரவேற்கப்பட்டு திருமலை வீதியால் அழைத்துவரப்பட்டு மட்டக்களப்பு நகரில் கூட்டம் நடத்தப்பட்டு மீண்டும் பெரியகல்லாறுவரை சென்று அமபாறை மாவட்டத்திற்கு செல்லவுள்ளது.

மார்ச் 12 இயக்கத்தின் பங்குதாரர்களாக சர்வோதயா, பவ்ரல், ரான்ஸ்பெரன்சி இன்ரர்நசனல்,  இலங்கை உள்ளுராட்சி உறுப்பினர்களின் மன்றம், சனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான அமைப்பு, ரைற்ஸ் நவ் மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு,  இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை தாதியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம்,  செடெக் நிறுவனம், தாய் மண்ணில் அன்னையரும் புதல்வியரும் அமைப்பு, இலங்கை இளைஞர் முஸ்லிம் சங்க சம்மேளனம், இலங்கை உள்ளுராட்சி சம்மேளனம், அத்துடன் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனுடன் இணைந்து செயற்படுகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: