(இ.சுதாகரன்)
வெளியாகியுள்ளகல்விப் பொதுத்தராதரசாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பட்டிருப்புகல்விவலயத்திற்குட்பட்டபெரியகல்லாறுஉதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் என்.மிதுர்சனாஆர்.கீதறம்மியாஆகிய இரு மாணவிகளும் ஒன்பது ஏ தரசித்தியினைப் பெற்றுபாடசாலைக்குபெருமைசேர்த்துள்ளனர்.
குறித்தபாடசாலையிலிருந்து இருபத்திஎட்டுமாணவர்கள் பரீட்சைக்குதோற்றிய நிலையில் 21 மாணவர்கள் உயர் தரம் கற்பதற்கானதகுதியினைப் பெற்றுள்ளனர். இதில் வணிகம் புவியியல் சித்திரம் நடனம் சுகாதாரம் விவசாயம் தகவல் தொழில்னுட்பம் ஆகியபாடங்களில் நூறு வீதமானசித்தியினையும் கணிதம் விஞ்ஞானம் ஆகியபாடங்களில் 89 வீதமானசித்தியினையும் தமிழ் பாடத்தில் 82 விதமானசித்தியினையும். வரலாறுமனையில் பாடங்களில் 75 வீதமானசித்தியினையும். சமயம் 93இஆங்கிலம் 64 வீதமானசித்தியினையும் பெற்றுள்ளனர். என்றுமே இல்லாதவகையில் மாணவர்கள் சாதனைபடைத்துள்ளனர். ஒட்டுமொத்தமான சித்திவீதம் 74 ஆகும்.
சிறந்தபரீட்சைப் பெறுபேறுகிடைத்தமையினைஅறிந்தவலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலைசமூகத்தினருக்குநன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment