5 Mar 2017

ஹசனலியுடன் இணைய வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்.

SHARE
முரண்பட்டு நிற்கும் ஹசனலி தரப்புடன் இணைய வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் தனக்குக் கிடையாது என கிழக்கு மாகாண சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
ஷிப்லி பாறூக் ஹசனலியுடன் இணைய முஸ்தீபு முக்கியஸ்தர்கள் பலரும் பேச்சு எனும் தலைப்பில் உண்மைக்குப் புறம்பான கற்பனைச் செய்திகள் உலாவந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு தனது மறுப்பை தெரிவிக்கும் வகையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்து அறிக்கை ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (05.03.2017) வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது@ நான் தற்பொழுது அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை பலப்படுத்துவதற்கும் தற்போது மக்கள் மத்தியில் எனக்கும் கட்சிக்கும் இருக்கும் ஆதரவினை மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் வங்குரோத்தர்கள் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார்கள்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும் ஹசனலி அவர்களுக்கும் பிரச்சினைகள் தோற்றம்பெற்ற நாளிலிருந்து நான் ஒரு சந்தர்ப்பத்தில் கூட ஹசனலியுடன் பேசியதோ அவருடன் தனிப்பட்ட வகையில் சந்திப்புக்களை மேற்கொண்டதோகிடையாது.

மேலும்,  இவ்வாறு ஆதாரமற்ற முறையில் அரசியல்வாதிகளுடன் செய்திகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கும்போது அதனை சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகளிடமோ அல்லது அவர்களுக்கு பொறுப்பான ஊடகப்பிரிவிடமோ செய்தியின் உண்மைத் தன்மையினை கேட்டறிந்து பிரசுரிக்க வேண்டும்.

வெறுமெனே ஊர்ஜிதப்படுத்தப்படாத நிலையில் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இணையத்தளங்களுக்கு வரும் செய்தியினை ஆதாரமற்ற முறையில் பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதனை இவ்வாறான இணையத்தளங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: