பிரான்ஸ் நாட்டிலிருந்து இருந்து இலங்கை திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தந்தையும் மகளும் புதன்கிழமை மாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு 4, ஆரையம்பதியைச் சேர்ந்த அலையப்போடி தியாகராசா (வயது 55) அவரது மகள் தியாகராசா ஜனனி (வயது 24) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸ் சென்று வாழ்ந்து வருவதாகவும் மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக சொந்த ஊர் திரும்பிய வழியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
புலம்பெயர் நாடுகளில் போராட்ட அமைப்புக்கு உதவும் காரியங்களில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ காரணம் இன்னமும் வெளியாகவில்லை.

0 Comments:
Post a Comment