8 Feb 2017

உத்தேச தேர்தல் முறைமையில் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மையினரின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்-கிழக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

SHARE
உத்தேச தேர்தல் முறைமை  சீர்த்திருத்த்தில் வடக்கு கிழக்குக்கு   வெளியே  வாழும் சிறுபானமையினரின்  பிரதிநிதித்துவங்ளை  பாதுகாப்பதற்கான ஷரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித் துள்ளார் இவ்விடையம் தொடர்பில் அவர் செவ்வாய் கிழமை (07) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது...

தொகுதிவாரி மற்றும் விகிதாசார  தேர்தல் முறைமை  இணைந்த்தான தேர்தல் முறைமையொன்று  அறிமுகப்படுத்தப்பட்டாலும் விகிதாசார  தேர்தல் முறைமையின் கீழ்  கிடைக்கப்பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய அச்ச நிலைமை சிறுபான்மையினர் மத்தியில் உள்ளதை உணரக்கூடியதாக உள்ளது.


கலப்பு தேர்தல்  முறைமையின்  ஊடாக தேர்தல் நடத்தப்பட்டாலும் அங்கு தொகுதிவாரியானதேர்தல்   முறைமைக்கு  அமைய அதிக ஆசனங்கள் வழங்கப்படும் பட்சத்தில் பெரும்பான்மையினரின் பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே  ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில்  ஒவ்வொரு  பிரஜையினதும்  வாக்குரிமை  முக்கியமானது என்பதுடன்   அனைவரினதும்  அரசியல் உரிமைக்கும்  உரிய  பெறுமதி அளிக்கப்பட வேண்டும்.

சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்களை  திருப்திபடுத்துவதன் ஊடாக ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்துக்கும் நியாயமான   தேர்தல் முறைமையொன்றை  உருவாக்கியதாக அர்த்தம் கற்பிக்க முடியாது என்பதால்  தேர்தல் முறைமைத் திருத்தத்தில்  அரசாங்கம் இந்த விடயங்ளை மிக அவதானமாக  கையாள வேண்டும்.

தேர்தல் முறைமைத் திருத்தம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்கால அரசியல் இருப்பை  தீர்மானிக்கும் விடயம் என்பதால்    இதனை  எந்வொரு தரப்புக்கும் சிறு பாதிப்புக் கூட ஏற்படாத வகையில்  உருவாக்குவதன் ஊடாக  நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மையினரின் நல்லெண்ணத்தை  வென்றெடுக்க ஏதுவாக அமையும்.

வடக்கு கிழக்குக்கு  வெ ளியே   பெரும்பான்மையினர்  அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிதறி வாழும் சிறுபான்மையினரின் வாக்குகள் வீணடிக்கப்படாமல் அந்த  மக்களின் வாக்குக்கு பெறுமதி  அளிக்கப்பட்டு  அவர்களின்  அரசியல் தேவைகளையும்  அபிலாஷைகளையும்  பூர்த்திசெய்வதற்கான பிரதிநிதியொருவரை பெற்றுக்கொள்வதற்கான  வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அது மாத்திரமன்றி பெரும்பானமையினரின் பகுதிகளில் வசிக்கும் சிறுபானமையினரின் விகித்த்திற்கு ஏற்ப வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்பட்டு  சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்படாத வகையிலான தேர்தல் முறைமையொன்றை உருவாக்கி சிறுபான்மை மக்களின் அரசியல்  உரிமைக்கு பாதுகாப்பளிக்க அரசாங்கம் முன்வரவேண்டும்  என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்  அஹமட்கேட்டுக் கொண்டுள்ளார்..



SHARE

Author: verified_user

0 Comments: