ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை கோரும் நிலையில் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும் தமது சுய இலாபங்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்க பலர் இப்பொழுது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முயற்சி மேற்கொண்டிருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிரதேச அமைப்பாளருமான ஏ.எல்.எம். நஸீர்; தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை (08.02.2017) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்@
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தினூடாகத்தான் இலங்கை முஸ்லிம்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
ஆனாலும், சிறுபான்மை மக்களுக்கான அந்தப் பேரியக்கத்தை அழித்தொழிக்க இப்பொழுது பலர் முன்வந்துள்ளார்கள் என்பது வேதனை தருகிறது.
அவர்கள் வெளிநாடுகள் பலவற்றில் பணம் பெற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது, அதில் பஷீர் சேகுதாவூத்தும் இணைந்து பொய்யான புனையப்பட்ட கதைகளை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கூறிவருகின்றார்.
தான் 2004 ஆம் ஆண்டிலிருந்து கட்சித்தலைவருக்கு எதிரான ஆவணங்களை சேகரித்துள்ளதாக பஷீர் சேகுதாவூத் கூறியுள்ளார்.
அப்படியானால் அவர் 2004 ஆம் ஆண்டிலிருந்தே இக்கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக செயற்பட்டுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது.
பஷீர் சேகுதாவூத் கடந்த தேர்தல்களில் தலைவர் ரவூப் ஹக்கீமின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்டு வந்துள்ளார்.
அத்துடன் இக்கட்சியில் இருந்த பல உயர்பீட உறுப்பினர்களையும் தவறாக வழிநடாத்தியுள்ளார்.
அவர்களை கட்சிக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டியுள்ளார் என்பதையும் அறியமுடிகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு எதிராக பல அழுத்தங்களை கொடுத்து கடந்த 16 வருடங்களாக பதவியாசை பிடித்தவர்களான றிஷாத் பதியுத்தீன், அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத் போன்றவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.
ஆனால், இவை ஒன்றும் இங்கு எடுபடப்போவதில்லை. மக்கள் இப்பொழுது நிதானமாக சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது பல முக்கியஸ்தர்களை கொண்டு இயங்கும் கட்சி.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹ{னைஸ் பாரூக் இப்பொழுது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{டன் இணைந்து கொண்டுள்ளார்.
அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முதலாவதாக மைத்திரிபால சேனவுடன் இணைந்து கொண்ட தைரியமானவர்.
மஹிந்தவின் கொள்கைகள் பிடிக்காமலும் அவர் மக்களுக்காக சிந்திப்பவரில்லை என்றும் அறிந்து சட்டத்தரணி ஹ{னைஸ் பாரூக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{டன் இணைந்து கொண்டார்.
அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் மஹிந்தவின் செல்லப்பிள்ளையாக இருந்து வந்தவர்கள்.
ஆனால், இவர்களின் சதித் திட்டத்தின் மூலம் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உரிமைக் குரலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒரு போதும் பலமிழக்கச் செய்ய முடியாது” என்றார்.
0 Comments:
Post a Comment