உலகை அச்சுறுத்தும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
ராபிதது அஹ்லிஸ் ஸ{ன்னா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பரவலான சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் உட்பட கிழக்கு மாகாணத்தின் பல முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
அதேவேளை துண்டுப் பிரசுரங்களும் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@ உலகை அச்சுறுத்தும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும், இஸ்லாமும் தீவிரவாதமும், இஸ்லாத்தின் பார்வையில் ஐஎஸ் ஐஎஸ், ஐஎஸ் ஐஎஸ் தொடர்பாக சந்தேகங்களும் பதில்களும் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ராபிதது அஹ்லிஸ் ஸ{ன்னா என்ற தமது அமைப்பு வழங்கி வருவதாக அந்தப் பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment