மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டான்சேனை ஜின்னா வீதி, பாலையடித்தோணா எனுமிடத்தில் புதன்கிழமை 08.02.2017 ஆயுதங்கள்
மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு ரீ-56 ரக தன்னியக்கத் துப்பாக்கிகள், ஒரு மகஸீன் மற்றும் 176 துப்பாக்கி ரவைகள் என்பனவே மீட்கப்பட்டுள்ளன.
தனியார் காணியொன்றின் உரிமையாளர் தனது நிலத்தைப் உழவு இயந்திரத்தினால் பண்படுத்திக் கொண்டிருந்தபோது இந்த ஆயுதங்கள் வெளிக்கிளம்பியுள்ளன.
உடனடியாக இதுபற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதின் பேரில் இவை மீட்கப்பட்டன.
இந்த ஆயுதங்கள் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டவையாகவும் பழமையானதாகவும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலித்தீன் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் மறைத்து புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment