11 Jan 2017

2016 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் யாவும் பூர்த்தி.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு 2016 ஆம் ஆண்டில் ஓதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து திட்டங்களும் 2016.12.31 ஆம் ஆம் திகதியுடன்
பூர்திசெய்யப்பட்டுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் புதன் கிழமை (11) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் அவர் தெரிவிக்கையில்….

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் அபிவிருத்திக்காக கடந்த வருடம் 280 திட்டங்கள் முன்மெழியப்பட்டு இதற்காகவேண்டி 136.283 மில்லியன் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அபிவிருத்தித்திட்டங்களுக்காக ஓதுக்கிடு செய்ப்பட்டிருந்த நிதியை உரியமுறையில்  பயன்படுத்தி திட்டங்கள் அனைத்தும் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளன.

வாழ்வாதார மேம்பாட்டு அபிவிருத்தித்திட்டம், கிராமிய உட்கட்டமைப்பு வேலைத்திட்டம், போசாக்கு வேலைத்திட்டம், திவிநெகும வேலைத்திட்டம், அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: