மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ஜப்பான் நாட்டு அரசின் 514 மில்லியன் ரூபாய்
செலவில் புதிதாக நிருமாணிக்கப்பட்டுள்ள நவீன உபகரணங்களுடன் கூடிய வைத்தியசாலைக் கட்டத்தொகுதியை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோக பூர்வமாக திறந்து கையளிக்கவுள்ளாதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நலம்புரிச் சங்கம் புதன் கிழமை (11) தெரிவித்துள்ளது.
களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இவ்வாதார வைத்தியசாலையின் மருத்துவ சேவையினை நம்பி பட்டிருப்புத் தொகுதியிலுள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதுவரைகாலமும் கட்டட வசதி மற்றும் நவீன வைத்தியசாலை உபகரணங்கள் இன்மையினால் இவ்வைத்தியசாலை நிருவாகம் பல சிரமங்களை எதிர் கொண்டு வந்திருந்து. இந்நிலையில் பெப்ரவரி முதலாம் திகதி இவ்வைத்தியசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறையின் பெரும்பாலான பகுதி பூர்தி செய்யப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள ஏ தர ஆதார வைத்தியசாலையாகக் காணப்படும் இவ்வைத்தியசாலைக்கு புதிய கட்டடங்கள் அமையப் பெற்றுள்ள போதிலும் அவசர ஆளணிப் பற்றாக்குறையையும் உடன் நிவர்த்தி செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் விசேட வைத்திய நிபுணர் - 01, மகப்போற்று வைத்திய நிபுணர் - 01, விசேட சிறுவர் வைத்திய நிபுணர் - 01, மயக்க மருந்து நிபுணர் - 01, வைத்திய அதிகாரிகள் - 20, தாதி உத்தியோகஸ்த்தர்கள் - 30, ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் - 02, மருத்துவியலாளர்கள் - 03, கதிரியக்கவியலாளர் - 01, சிற்றூளியர்கள் 20, பேர் தேவையாகவுள்ளனர்.
இவற்றினைவிட வைத்தியர் விடுதி, ஏனைய உத்தியோகஸ்த்தர்களின் விடுதி, மற்றும் மலசலகூட சுத்திகரிப்பு வசதிகளும், உடனடி அவசரத் தேவையாக உள்ளன. பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி இவ்வைத்தியசாலையின் புதிக கட்டடத் தொகுதியினை திறந்து வைக்கும் அதேவேளை இங்கு காணப்படும் ஆளணிப் பற்றாகுறைகளும் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் மிகத் தகுந்த மருத்துவ சேவையினை இவ்வைத்தியசாலையூடாக வழங்க முடியும் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நலம்புரிச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment