28 Nov 2016

45 முஸ்லிம் மக்களும், மாவீரர்களாகியுள்ளார்கள் - யோகேஸ்வர்ன் எம்.பி.

SHARE
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மாத்திரமின்றி 45 முஸ்லிம் மக்களும், மாவீரர்களாகியிருக்கின்றார்கள் எனவே தமிழ் பேசும் மக்கள் ஒருமித்து மண்ணின் விடுதலைக்காக மாவீர்களாக தீயாகம் செய்துள்ளார்கள். 

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வர்ன் தெரிவித்துள்ளார். 

மாவீரர் தின நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (27) மாலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

இலங்கைளில் ஆட்சியுரிந்த அரசாங்கங்கள்தான் தீயாகங்களைச் சரியாக மதிக்கவில்லை. இரண்டு நாடுகளுடுக்கிடையல் நடைபெறுவதுதான் போராகும் ஆனால் உள்ளாட்டில் உரிமைக்காகப் போராடுவது பெரிய அளவில் போராகக் கொள்ளப்படுவதில்லை. இதனை விளங்கிக் கொள்ளத நிலமையினால் எமது போராளிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டன.

இந்தியாவிலே சீக்கியர்களை இந்திய இராணுவம் அழித்துவிட்டு வெற்றிவிழா கொண்டாட நினைத்த தருணத்தில் நம் நாட்டு மக்களை நாமே அழித்துள்ளோம் இதற்கு வெற்றிவிழா வேண்டாம் என அப்போதிருந்த இந்திராகாந்தி தெரிவித்திருந்தார்.

அதுபோல் அமெரிக்காவிலே அப்போது நடைபெற்ற யுத்தத்தின்போது எந்த உயிரும் காவு கொள்ள முடியாத நிலையில் யுத்தம் நடைபெற வேண்டும் என ஆப்போதைய அந்நாட்டு ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தெரிவி;திருந்தார். 

மாறாக நமது நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுக் கலவரத்தில் பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுத்தப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் எதிர்கால நலங்களை மையமாக வைத்துத்தான் மாபெரும் தியாகங்களை எமது மாவீரர்கள் செய்திருக்கின்றார்கள். எங்களுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு நாம் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்ர்கள் யார் என்பதை தெழிவாக புறனநூறு காட்டியிருக்கின்றது. வீரத்தாய்மார் வீரர்களைப் பெற்று மண்ணுக்கு வித்துடல்களாக ஆக்கியிருக்கின்றார்கள்.  வீர மறவர்களைப் பெற்று மாபெரும் தியாகங்களைச் செய்தமைக்காக வீரத் தாய்மார்களையும் நாம் நினைவு கூருகின்றோம். 

மாவீரர்களின் கனவு முற்றுமுழுதாக நிறைவேற்ற முடியாத சூழல் உருவானாலும் எமது மக்கள் மாவீரர்களின் கனவை நிறைவேற்றுகின்ற பாதைக்கு எமக்கு ஆரோக்கியம் தருவர்கள், மாவீரர்களின் நோக்கத்திற்கு ஏற்ப தற்கால சூழ்நிலைக்கு அமைவாக எமது நடடிக்கையின் நிழிர்த்தம் வெற்றியடையச் செய்வோம் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: