கல்விப் பொதுத்தர சாதாரண தர மாணவர்கள் இவ்வருட இறுதியில் பரீட்சை எழுதிய பின்னர் பெறுபேறுகளுக்காகக் கத்திருக்கும் கால்திற்குள் அவர்களது மொழி விருதியை மேம்படுத்திவதற்கு மட்டக்களப்பு ஒக்ஸ்போட் கல்வி நிறுவனத்தின் அனுசரணையுடன் பயிற்சைகளை பயிற்சிகளை எற்பாடு செய்துள்ளது.
கிழக்கின் இளைஞர் முன்னணியும் தேசிய மொழிக் கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவகமும் இணைந்து மட்டக்களப்பு ஒக்ஸ்போட் கல்வி நிறுவனத்தின் அனுசரணையுடன் கல்விப் பொதுத்தர சாதாரணதர மாணவர்கள் இவ்வருடம் பரீட்சை எழுதிய பின்னர் அவர்கள ரூபா 420,000.00 பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கி வைக்கப் பட்டுள்ளதாக கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்தார்
குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற (க.பொ.த) சாதாரண தர மாணவர்களிற்கான இலவசக் கல்விக்கருத்தரங்கின் போதே இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து தலைவர் கோபிநாத் கருத்து தெரிவிக்கையில் மாணவர்கள் தங்களுடைய கல்விப் பொதுத்தர சாதாரணதர பரீட்சையினை நிறைவு செய்ததும் பரீட்சை பெறுபேறு வெளியிடும் வரையில் இருக்கும் சுமார் நான்கு மாத காலத்தினை பயனுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும். ஒவ்வொரு மாணவரும் இக்காலப்பகுதியினுள் தங்களுடைய தகமைகளினை உயர்த்தும் வகையில் நேரத்தினை செலவளிக்க வேண்டும். நேரம் பொன்னானது எனக் கூறுவார்கள் ஆனால் உண்மையிலே பொன்னோடும் ஒப்பிட முடியாத விலைமதிப்புமிக்க செல்வமே நேரமாகும்.
வீணாக்கும் பொழுதுகள் எப்பாடு பட்டாலும் மீண்டும் பெறமுடியாதவை. எனவே கல்விப் பொதுத்தர சாதரணதரப் பரீசை முடிவுற்ற பின்னர் மாணவர்களாகளுக்குக் கிடைக்கும் நான்கு மாத காலப்பகுதியினுள் இவ் புலமைப்பரிசிலை பயன்படுத்தி உங்களுடைய கல்வித் தகமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் மாணவர்களுகக்குத் தேவையான உதவிகளை மேலும் வளங்க எமது அமைப்பும் தயாராக உள்ளது. நாளைய எமது தமிழ்ச் சமூகம் உங்களுடைய கரங்களிலே உள்ளது, அதனால் தான் மாணவர்களின் கரங்களை பலப்படுத்தும் முயற்சியில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். என அவர் தெரிவித்திருந்தார்.
0 Comments:
Post a Comment