13 Jun 2016

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு

SHARE
(டிலா )
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு போரத்தின் தலைவர் கலாபூசனம் எம்.ஏ.பஹுர்த்தீன் தலைமையில் (12.06.2016) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. இப்தார் விசேட மார்க்க சொற்பொழிவை மெளலவி.கே.எல்.சி யானுத்தீன் நிகழ்த்தினார். நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகரஅபிவிருத்தி அமைச்சருமான றவூப் ஹக்கீம், உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், பிரதி அமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மெளலானா,மஹ்ரூப், கோடிஸ்வரன் (கவீந்திரன்), கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் , உறுப்பினர்கள், முன்னாள் அரசியல் தலைவர்கள் , கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் என பெருமளவானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
நன்றி உரையை போரத்தின் செயலாளர் எம்.சஹாப்தீன் நிகழ்த்தினார்.நிகழ்வை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.ஸினாஸ் தொகுத்து வழங்கினார்.













SHARE

Author: verified_user

0 Comments: