12 May 2016

அபிவித்திக் குழு இணைத்தலைவராக சாணக்கியன் நியமனம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின்  மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை மேற்கு ஆகிய  மூன்று பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி சாணக்கியன் இராசமாணிக்கம்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் , பட்டிருப்பு தொகுதியியை பிரதினிதித்துவப்படுத்தி இருந்து இம்முறை பொதுத் தேர்தலில்   எந்தவொரு உறுப்பினரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகாத சந்தர்ப்பத்தில் இப்படியான ஒரு பதவியை    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக என்னை நியமித்திருப்பதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைவதோடு உளமார நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.


இந்தபதவியால் இப்பகுதி மக்களுக்கு என்னால் முடிந்தவரை பணி செய்வேன்  எமது பிரதேசத்தை வளமான பிரதேசமாக மாற்றுவதற்கு   தேவையான சகல அபிவிருத்திகளையும்  பெற்றுக்கொடுக்க நான் தயங்கமாட்டேன் எனக்கூறினார்.


SHARE

Author: verified_user

0 Comments: