1 Apr 2016

ஜனாதிபதி ஏறாவூரில் தொழிற்சாலைகளைத் திறந்து வைத்தார்.

SHARE

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்திறி நெசவுத் தொழிற்சாலைகளைத் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் (01) இடம்பெற்றது.
சுமார் ஐயாயிரம் குடும்பங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறித் தொழிற்சாலை என்பனவற்றைத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவூரில் 6 தொழிற்சாலைகள் திட்டம் அமுலாகிறது.

இதனடிப்படையில் முதற்கட்டமாக ஒரு ஆடைத் தொழிற்சாலையும், ஒரு கைத்தறித் தொழிற்சாலையும் வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூரில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப் பட்டன.

இதன் மூலம் ஏறாவூரில் நேரடியாக தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக மூவினங்களையும் சேர்ந்த 3000 குடும்பங்களும் வேலைவாய்ப்பைப் பெறுவர் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கூறினார்.

இந்நிகழ்வின்போது அமைச்சர் றவூப் ஹக்கீம், உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொதுமக்கள், அரச அதிகாதரிகள் என பலர் கலந்து  கொண்டிருந்தனர்.

தொழிற்சாலைகளைத் திறந்து வைப்பதற்காக பெப்ரவரி 06 ஆம் திகதி ஏறாவூருக்கு வருகை தரவிருந்த ஜனாதிபதியின் விஜயம் முன்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் முன்னர் பிற்போடப்பட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கதாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: