மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி 2
இல் கஞ்சாவுடன் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறப்பட்ட இந்த நபர் நடமாடித் திரியும் பகுதிக்குச் சென்ற பொலிஸ் ரோந்துப் பிரிவினர் அங்கிருந்து கஞ்சாவுடன் புதன்கிழமை 09.02.2016 ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
களுவன்கேணியிலுள்ள வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட 21 வயதான நபரிடமிருந்து 3590 மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இச்சம்பவங்;கள் பற்றி மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்;ளதாகவும் கூறினர்.
0 Comments:
Post a Comment