8 Mar 2016

பெண்­க­ளுக்கு வழங்கும் அங்­கீ­காரம் ­ச­மூ­கத்தின் அபி­வி­ருத்தியின் அள­வு­கோ­ல்

SHARE
(டிலா)

ஒரு சமூகம் அதன் பெண்­க­ளுக்கு வழங்கும் அங்­கீ­காரம் அச்­ச­மூ­கத்தின் அபி­வி­ருத்தித் தரத்தின் அள­வு­கோ­லாகக் கரு­தப்­ப­டு­கி­றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொட்­டிலை ஆட்டும் கரங்கள் உலகை ஆளும் என்ற பழ­மொழி இலங்கை சமூகம் அதன் வர­லாறு நெடு­கிலும் பெண்­களின் கௌர­வ­மான சமூக அந்­தஸ்தைப் புரிந்து வைத்­தி­ருப்­பதை எடுத்­துக்­காட்­டு­கி­றது.

என்­றாலும் இன்­றைய நிலை­மையை நாம் எடுத்து நோக்­கினால் கடு­மை­யான பொரு­ளா­தார மற்றும் சமூக மாற்­றத்தின் பல்­வேறு யுகங்கள் கடந்­துள்ள நிலையில், பெண்­களின் வகி­பாகம் குறித்து பல்­வேறு பிரச்­சி­னைகள் எழுந்­துள்­ளன என்­பதை நாம் விளங்­கிக்­கொள்ள வேண்டும். உலகில் முத­லா­வது பெண் பிர­தமர் மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியைப் பெற்ற நாடு என்­ற­போ­திலும், இந்த நாட்டின் பெண்­களும் பெண் பிள்­ளை­களும் இன்னும் அவர்­க­ளது பாது­காப்புக் குறித்த பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

இலங்­கையில் பெண்கள் புலம்­பெயர் தொழி­லா­ளர்­க­ளா­கவும் ஆடைத்­தொ­ழிற்­துறை ஊழி­யர்­க­ளா­கவும் பெருந்­தோட்­டத்­துறை ஊழி­யர்­க­ளா­கவும் அந்­நியச் செலா­வ­ணியை ஈட்­டித்­தரும் முக்­கிய மூல­மாகவும் உள்­ளனர். என்­றாலும் அவர்­க­ளது தொழில் பாது­காப்­பின்­மையைக் கவ­னத்திற் கொள்­கின்­ற­போது, ஒரு தேசம் என்­ற­வ­கையில் அவர்­க­ளது வரு­மானம் குறித்து நாம் மகிழ்ச்­சி­ய­டைய முடி­யாது.

பாது­காப்­பான தொழில்­களைப் பெற்­றுக்­கொள்ள உத­வு­வதன் மூலமும் சமூக தலை­மைத்­துவ அந்­தஸ்த்­து­களை அவர்கள் அடைந்து கொள்­வ­தற்குத் தடை­யா­க­வுள்ள சட்ட மற்றும் சமூக தடை­களை அகற்றி ஒரு அபி­வி­ருத்­தி­ய­டைந்த கல்வி மற்றும் தொழிற் திறன்­களை அவர்­க­ளுக்கு வழங்­கு­வ­த­னூ­டாகவும் மட்­டுமே பெண்­களை வலு­வூட்ட முடியும்.

இந்த விட­யத்தில் அர­சாங்­கத்தின் முழு­மை­யான அர்ப்­ப­ணிப்பை வெளிப்­ப­டுத்தும் வகையில், பாரா­ளு­மன்­றத்­திலும் ஏனைய அர­சியல் கட்­ட­மைப்­பு­க­ளிலும் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்­வ­தற்கு அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் ஒரு சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

சட்­டங்­க­ளி­னூ­டாக கைக்­கொள்­ளப்­ப­டு­கின்ற உரி­மைகள் சமூ­கத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதை உறுதி செய்­வ­தற்­கான ஒரு விரிந்த சமூக உரை­யாடல் அவ­சி­ய­மாகும். பெண்கள் தொடர்­பான இந்த உரை­யா­டலைத் தொடர்­வ­தற்கு மார்ச் 08 ஆம் திகதி கொண்­டா­டப்­படும் சர்­வ­தேச பெண்கள் தினம் ஒரு சிறந்த அடித்­த­ள­மாகும்.

வலுவூட்­டப்­பட்ட பெண்கள் – நிலை­யான எதிர்­காலம் என்ற இவ்­வ­ருட கருப்­பொ­ரு­ளி­னூ­டாக சமூ­கத்­திற்கு வழங்கப்படும் செய்தி நிலையான அபிவிருத்திக்கு பெண்களை வலுவூட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. பால் அநீதியின்றி நாகரீகமும் பண்பாடும் மிக்க ஒரு சமூகம் இந்த உரையாடலை முன்னெடுத்துச் செல்வது திருப்தியளிக்கிறது.
SHARE

Author: verified_user

0 Comments: