28 Feb 2016

பட்டிருப்புத் தொகுதியில் கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீனால் மூன்று நிகழ்வுகள் அங்குரார்ப்பணம்.

SHARE
கிழக்கு மாகாணத்தின் முதலாவது சதொச விற்பனை நிலையம் இன்று ஞாயிற்றுக் கிழமை (28)  மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிலையில் இன்றயதினம், பட்டிருப்பு கிராமத்தில் 2 மில்லியன் ரூபாய் செலவில் நிருமானிக்கப் பட்ட புதிய பாலர் பாடசாலைக் கட்டமும் திறந்து வைக்கப்பட்டதோடு, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் வைத்து பொற்றொழிலாளர்கள் 200 பேருக்கு பட்டைதீட்டும் இயந்திரங்களும், கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன், கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீரலி, ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பானர் சோ.கணேசமூர்த்தி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், உட்பட அரசியல் பிரமுகர்கள், கிராம nhபரியோர்கள், என ஏராளமான பொதுமக்களும் காலந்து கொண்டிருந்தனர்.























SHARE

Author: verified_user

0 Comments: