பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மீதான தடுப்பு காவல் உத்தரவு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க படசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.
குறித்த வாக்கு மூலத்தையடுத்து விசாரனைகளை மேற்கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்டார்.
விசாரனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் தடுப்புக் காவல் உத்தரவை நீடிக்க நீதிமன்ற அனுமதி கோரி பொலிஸார் முன் வைத்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம்.கணேசராசா, தடுப்பு உத்தரவு நீடிப்பதற்கான அனுமதியை வழங்கினார்.
0 Comments:
Post a Comment