விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே நாங்கள் ஆத்திரப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு ஆதரவாக குப்பைத் தொட்டியில் போடப்பட்ட ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இருக்கின்றனர் இதனால் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்
மட்டக்களப்பில் இடம் பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக் கிழமை (06) தமிழரசி கட்சி மாவட்டக் காரியாலயத்தில் இடம் பெற்றது இதன்போது சுமந்திரன் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான முரண்பாடு தொடர்வில் எழுந்துள்ள நிலைகுறித்து தமிழரசிக் கட்சியன் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பொன்.செல்வராசா அவர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்சிக்குள் முரண்பாடு உள்ளதுதான் இல்லை என்பதற்கு இல்லை அனால் முரண்பாடுகள் அனைத்தும் கட்சிக்கு வெளியில் செல்லக் கூடாது அனைத்து விடயங்களும் உள்ளுக்குள் பேசித்தீர்க்கப்பட வேண்டும். ஜனநாயக கட்சி என்ற ரீதியில் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும், அது ஒருபெரிய விடயமல்ல அனால் அவைகள் வெளியில் ஊடகங்களில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை
சுமந்திரனைப்பற்றியும் முதலமைச்சரைப்பற்றியும் சொன்னீர்கள் அவர்களுக்குள் முரண்பாடுகள் உள்ளதுதான் இல்லை என்பதற்கில்லை அது தற்போதும் இருக்கின்றது. ஏற்பட்டமைக்கான காரணம் என்னவென்றால் கடந்த பாராளுமன்றத்தேர்தலின் போது முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரிக்கவில்லை. அவர் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் ஊடாக இலங்கைத் தமிழரசிக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எனவே அவருக்கு ஒரு கடமை இருக்கின்றது அந்த கட்சியை ஆதரிப்பதற்கு, ஆனால் அவர் ஆதரிக்கவில்லை ஆதரிக்காமல் விட்டது மாத்திரமல்ல நான் மௌனியாகப் போகின்றேன், ஊமையாகப் போகின்றேன் என்றெல்லாம் சொல்லிவிட்டு அவர் விட்ட அறிக்கைகள் வேறொரு கட்சிக்கு ஆதரவளிப்பதாக அமைந்ததாக ஒரு கருத்து இருக்கின்றது. இந்த காரணத்தின் நிமித்தம்தான் இந்த முரண்பாடு ஏற்பட்டது. அது பற்றிய விமர்சனங்கள் எமது தமிழரசிக் கட்சிக் கூட்டத்தில் சுமந்திரன் அவர்கள் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தினை கூட முன்வைத்திருந்தார் இதனை நான் பேசித்தீர்த்துக் கொள்வோம் என கூறியிருந்தேன்.
வந்த பிழை என்னவென்றால் சுமந்திரன் அவுஸ்ரேலியாவுக்கு சென்றபோது விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் அவ்வாறு ஊடகத்தில் பதிலளித்திருக்கக் கூடாது அவர் கட்சிக்குள் முரண்பட்டவர் அதற்கு கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய பிறகு அவர் அதனை ஊடகத்தில் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை
நாங்கள் முடிவெடுக்க வேண்டும் சில சமயம் ரணில்விக்கிரமசிங்கவோ,அல்லது ஆட்சியில் உள்ளவேறு நபர்களோ எங்கள் மத்தியில் சிறு சிறு விடயம் சம்பந்தமாக வேற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக அரசியல் தீர்வினை தவிர்த்துக் கொள்ளலாம் இதற்கு நாங்கள் பலியாகக் கூடாது அவதானமா இருக்க வேண்டும்
விக்னேஸ்வரன் கட்சித்தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே நாங்கள் ஆத்திரப்பட வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு ஆதரவாக குப்பைத் தொட்டியில் போடப்பட்ட ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இருக்கின்றனர் இதனால் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.
அவரை முதலமைச்சராக்கியது நான், அவரை முதலில் போய் கேட்டது நான் எமது கட்சி கூடி முதன்முதலாக பேசியபோது அவருக்கு கட்சிக்குள் எவரும் ஆதரவாக இருக்கவில்லை சேனாதிராஜா மௌனம் சாதித்தார், அவரின் பெரும் தன்மை இறுதி நேரத்தில் அண்ணனின் கருத்தோடு நீங்கள் அனைவரும் ஏற்று வந்தால் அவரைத்தான் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் பின்னர் அனைவரும் கூடி எடுத்த முடிவின் பிரகாரமே நாங்கள் நியமித்தோம். ஆனால் அவர் தற்போது தனி வழியில் போய்க் கொண்டு இருக்கின்றார். நான் அவரை நிப்பாட்ட மாட்டேன். இது மக்களின் முடிவு நான் இந்த பதவியில் இருப்பது மக்களின் முடிவு ஐயா நீங்கள் போக வேண்டும் விக்னேஸ்வரனை வைக்கபோகின்றோம் என்றால் உடனடியாக அதனை நான் ஏற்றுக் கொள்வேன் ஏனத் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment