13 May 2026

கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காய் கஞ்சி வழங்கி வைப்பு.

SHARE

கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காய் கஞ்சி வழங்கி வைப்பு.

முள்ளவாய்க்கால் நினைவு வாராத்தின் ஆரம்ப நாளாகிய செவ்வாய்கிழமை(12.05.2026) மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காய் கஞ்சி காய்சி வழங்கப்பட்டது. 

முதலில் கறுவாக்கேணி முச்சந்தி பிள்ளையாருக்கு பூஜைநடைபெற்று பின்னர் முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதன் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. இந்த முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் சைவக்குருமார், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: