29 Aug 2015

மனிதத்துவத்தை மதிப்போம் நூல் வெளியீடு

SHARE

மனிதத்துவத்தை மதிப்போம் எனும், தலைப்பில் சமூக சேவையாளர், அமரர்.சி.மயில்வாகனத்தின் நினைவுச்சுவடுகள் தாங்கிய நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை (29) கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிஷன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பேராசிரியர் மா.செல்வராசாவின், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக சேவையாளர் அமரர்.சி.மயில்வாகனத்தின்; சேவையின் மகத்துவத்தினை பாராட்டி அவரது மனைவிக்கும், பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர் ச.சந்திரசேகரத்திற்கும், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் தலைவர்,பேராசிரியர் மா.செல்வராசாவிடமிருந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர் ச.சந்திரசேகரம்; முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், ஆசிரிய வளநிலைய முகாமையாளர் சி.குருபரன், அதிபர்களான, வே.மகேசரெத்தினம், திருமதி.யோ.ஞானப்பிரகாசம்,  மற்றும், அரச உத்தியோகத்தர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: