பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைபப்பின் அரசியல் பலத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பதற்காக பல முகவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தாழங்குடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நடைபெற இருக்கின்ற இந்தப் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைபப்பின் அரசியல் பலத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பதற்காக பல முகவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதேபோன்று முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் அவரது சகாக்கள் சிலரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தற்போது போட்டியிடுகின்றனர். இவரின் கட்சி கடந்த முறை தனியாகப் போட்டியிட்டு எந்த ஒரு ஆசனத்தினையும் பெறாமல் தோல்வியடைந்தது.
இவ்வாறு போட்டியிடுகின்ற தரகர்களுக்கு நன்றாகத் தெரியும். தங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாதென இவர்களின் நோக்கம். எல்லாம் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதேயாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுமேயானால் அது பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தினைக் குறைத்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்கச் செய்யும்.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதமாக இருக்கின்ற தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய 4 பாராளுமன்ற ஆசனங்களுக்குப் பதிலாக 1 அல்லது 2 மட்டுமே கிடைக்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகின்ற அதேவேளை 25 சதவீதமாக இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கக் கூடிய 1 பாராளுமன்ற ஆசனங்களுக்குப் பதிலாக 3 அல்லது 4 ஆசனங்களை இந்தத் தரகர்கள் பெற்றுக் கொடுப்பார்கள்.
எனவே தமிழ் மக்கள் அனைவரும் தரகர்களிடம் ஏமாறாமல் மிகவும் விழிப்பாக இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இவ்வாறு ஒற்றுமையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்போமாக இருந்தால் 20 ஆசனங்களுக்கு மேல் எம்மால் பெற முடியும் எனவும் இந்த வெற்றியானது இலங்கையில் அமையப் போகின்ற புதிய அரசுடன் தமிழ் மக்களின் நிரந்தர தீர்வு பற்றி பேசுவதற்கு ஏதுவாக அமையும் எனவும் எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். ஐயாவின் இந்த எண்ணம் வெற்றியடைய தமிழ் மக்கள் ஓரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னால் திரள வேண்டும்.
அத்துடன் இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றால் சர்வதேசத்தினுடைய பார்வை எம்மீது அதிகரிக்கும் இது எமக்கான தீர்வைப் பெற்றுத்தர உந்துதலாக அமையும்.எனவே, அன்பான தமிழ் மக்களே தமிழ் தேசிய தொண்டர்களே தமிழ் தேசியத்தின் பால் விழிப்பாக இருங்கள். தேர்தல் தரகர்களிடம் ஏமாறாதீர்கள். எமது உரிமைக்காக எமது கட்சிக்கு தமிழ் மக்களின் கட்சிக்கு எமக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் எமக்குக் கிடைப்பதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி அதிகாலை எழுந்து தமிழர்களின் சின்னமான வீட்டுக்கு வாக்களியுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
1 Comments:
ஆங்கிலம் தெரியாத அரியம் அவர்களுக்கு,
நீங்கள் மக்களுக்கு என்ன செய்ததென்று கூறுங்கள் ஆனால் கூறுவற்கு ஒன்றும் இல்லையென்றால் மற்றவர்கள் லண்டனில் இருந்த கதை தேயையில்லை. நாங்கள் போன தேர்தலில் உனக்கு வாக்குப் போட்டோம் எனக்கு நீ என்ன செய்தாய்? தழிழர் கொல்லப்படும் போது நீ கேட்ட கேள்வி என்ன? நீ கொடுத்த பேட்டி என்ன? உன் தோல்வியை நான் எழுத்தில் தருவேன். இலங்கையில் இருந்த நீ என்ன செய்தாய் என்று கூறு பார்க்கலாம்? படிக்க வேண்டிய பிள்ளைகள் கையில் பந்து பரிசளித்தாராம்.உனக்கு லண்டன் செல்லக்கூடிய தகுதி கூட இல்லை. மட்டக்களப்பு மக்கள் என்ன அவ்வளவுக்கு முட்டால்களா? உனக்கு நான் கூறும் புத்திமதி ஊழல் விசாரணைக்கு தயாராகுங்கள்.
உன் வால் பக்கத்தில் இருப்பவனுக்கும் கூறிவை. அவரின் நினைப்பு தான் ஏதோ தலை மாதிரி.
அபிவிருத்தி செய்யத்தெரியாத உனக்கெல்லாம் ஏன் அரசியல்.
பன்றியுடன் கூடிய பசுவும் மலம் தின்னும் என்பது போல உன்னுடன் சேர்ந்து நாங்களும் நாசமாக விரும்பவில்லை. வாக்கு கேட்டு என் வீட்டுக்கு வந்தால் செருப்படி.
Post a Comment