கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சீ. தண்டாயுதபாணியினால் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பாடசாலைகள் மற்றும் சமூக நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான கடிதங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட 49 நிறுவனங்களுக்கு 5.7 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதற்கான கடிதங்களை வழங்கி வைத்தார். இதன் மூலம் பாடசாலைகளில் நிலவும் சில தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிவதுடன் சமூக நிறுவனங்களின் செயற்பாடுகளை வலுவானதாக மாற்ற முடியுமென்று இதன்போது அமைச்சர் குறிப்பிட்டார்.
விரைவில் வாழ்வாதாரத்தை விருத்தி செய்யும் வகையில் 60 பயனாளிகளுக்கு 2 மில்லியன் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் வறுமையான குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை விருத்தி செய்ய ஏதுவாக அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment