தற்போது இலங்கையிலே உள்ள பல சிறைச்சாலைகளில் பல இளைஞர் யுவதிகள் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்கள், திருமணமாகாத இளம் யுவதிகள்கூட பலர் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவை பற்றிக் கதைப்பதில்லை, அவர்களது பிள்ளைகளின் நலன்கள் பற்றிச் சிந்திக்கின்றார்களே! தவிர சிறையிலுள்ள பிள்ளைகள் பற்றிச் சிந்திப்பது கிடையாது.
என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சோமசுந்தரம் கணேசமூரத்தி தெரவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் தேவைகள் இன்னும் பூர்தியாக்கப் படவில்லை. சுகாதாரம், விளையாட்டு, விவசாயம், மீன்பிடி, கல்வி, போன்ற பல துறைகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட தேவைகளைப் பூர்தி செய்வதற்கு அரசாங்கக் கட்சியில் ஒருவரை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்தால் மாத்திரமே! அவரை அமைச்சராகி பல நிதி வளங்களைக் கொண்டு வந்து நமது மட்டக்களப்பு மாவட்டத்தை மென்மேலும் விருத்தியடையச் செய்யலாம்.
முன்னள் அமைச்சர் அஸ்ரப் இருந்த காலம் ஒரு பொற்காலம் எனலாம் அவரது காலத்தில் பற்பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 130 தேர்தல் தொகுதிக்கு மேல் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று எந்தவித வேறு கட்சிகளையும் கூட்டிணைக்காமல் தனியாக ஐக்கிய தேசிக் கட்சி மாத்திரம் புதிய அரசை அமைக்கவுள்ளது. மஹிந்த ராஜபக்சவை அபேட்சகராக நிறுதியதிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடு மழுங்கடிக்கப் பட்டுள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தை எமது தமிழ் மக்கள் நழுவ விடக்கூடாது.
வாக்குக் கேட்பதற்காக நான் கடந்த காலங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை அபிவிருத்தி செய்வதனால் எனக்கு மன நிறைவு ஏற்படுகின்றது. உலகத்திலே மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் செய்த சேவைகள் பற்றி தற்போதும் மக்கள் கதைக்கின்றார்கள். அதுபோல் இந்த பூமியில் மனிதன் பிறந்திருக்கின்றான் மக்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான். நானும் மக்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்.
கடந்த காலத்தில் நான் தொடர்ந்து 5 வருடங்களாவது அமைச்சராக இருந்திருந்தால் மட்டக்களப்பு மாவட்டம் தற்போது அபிவிருத்தி அடைந்திருக்கும்.
எமது ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசை அமைத்ததின் பிற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய தொழிற் பேட்டைகளை நிறுவப்பட்டு, இங்குள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சனைகள் இல்லாதொழிக்கப்படும்.
13 வது திருத்தச் சட்டத்தைக் கடந்து தற்போது சமஸ்ட்டி முறையிலான ஆட்சி தேவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சமஸ்ட்டி முறையைக் கொணர்தால் ஒற்றையாட்சிக்குள் தீர்வைக் காணமுடியாது.
ஆனால் சமஸ்ட்டி முறைக்கு நான் எதிர்க்கவில்லை, சமஸ்டி என்னறால் என்ற என்று தெழிவாகக் கூறி பெற்றுக் கொள்ள வேண்டும். சமஸ்டி முறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடமிருந்து பெற்றால் நானும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பாக நாடாளுமன்றத்தில் வாதிடுவேன் என அவர் தெரிவித்தார்.
1 Comments:
https://www.facebook.com/pages/Somasundaram-Ganeshamoorthy/863770150338624?fref=ts
நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்
Post a Comment